My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

23.11.12

தமிழன் உணர்வு பெற சாம்பார் பொடி சூரணம்... எனது முகநூலிலிருந்து... 23

ITCன் 'ஆசீர்வாத்' சாம்பார் பொடி சாப்பிட்டா, அதன் சுவை உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் 'அசல் தமிழனின் உணர்வை' தட்டி எழுப்புமாம். 


ஈழப் படுகொலை, மீனவர் படுகொலை, காவேரி, முல்லை பெரியாறு பிரச்சினை... இந்தக் கருமாந்திரங்கள் எல்லாம் தனக்கு எப்போது
ம் தமிழன் உணர்வைத் தரவே இல்லை என்று சுரணை மறத்துப் போனவர்கள், குறைந்த பட்ச்சம் இந்த சாம்பார் பொடியையாவது வாங்கி உபயோகித்து, அசல் தமிழனின் உணர்வை தட்டி எழுப்பிக் கொள்ளுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்ளப் படுகிறது!





000





போபாலில் யூனியன் கார்பைடு விஷவாயுவைக் கக்கி 23,000 'இந்தியர்கள்' உயிரைப் பறித்த கொலைகாரன் ஆண்டர்சனுக்கு தூக்கு எப்போது?

அவனைத் தப்பவிட்ட இந்திய நாட்டின் அரசியல் குற்றவாளி துரோகிகளுக்கு இரட்டை ஆயுள் எப்போது?

ஓ... இந்த 23,000 'இந்தியர்களும்' இன் கம் டேக்ஸ் கட்டி, கோட்டு சூட்டு போட்டு, தாஜ் ஹோட்டல் வராண்டாவில் சுட்டுக்கொல்லப் பட்டிருந்தால், அந்த ஆண்டர்சனுக்கு தூக்கு கிடைத்திருக்குமோ?!!





000





ஒரு வன்னியன் முதல்வராகும் வரை ஓயமாட்டேன்னு யாரோ ஒரு தைலாபுரத்து தத்துவ ஞானி சொன்னாராமே?

வன்னிய ஜாதியிலயே 'ஒசத்தியாவும் மட்டமாவும்' ஏகப்பட்ட பிரிவு இருக்கு. இப்ப என்ன பிரச்சினைன்னா, தைலாபுரத்து ஞானி, வன்னிய ஜாதியில எந்த உட்பிரிவுல வர்றாருன்னு பாக்கணும்.

ஏன்னா, ஒருக்கா, ஒரு வன்னியன் ஒரு முதல்வராகும் கால கட்டத்துல, தன்னோட பிரிவு ஆளு முதல்வரா வரும்வரை கண்ணை மூடமாட்டேன்னு மொதல்லேர்ந்து ஆரம்பிப்பாரு!

வீர வன்னியர்களே, உசாரு!!





000





கசாப்பை கசாப்பே போடலை; சும்மா ஏமாத்துறாங்கன்னு ஆர்வக்கோளாறுகள் கூப்பாடு போடலாம் என்பதற்காகவே, தூக்குப் போட்டவர்கள் அதை செல்போன் வீடியோ எடுத்து வைத்திருக்க வாய்ப்பு உண்டு. அப்படி எடுத்திருந்தா, கொஞ்சம் அன்னா அசாரேவுக்கு அவசரமா போட்டுக் காட்டிடுங்க. 





இந்த அருமையான அகிம்சாவாதி 'தூக்கை பப்பிளிக்குல போட்டிருக்கணும்...' அப்படீன்னு கூவறாராமே!!






19.11.12

பாம்பேல ஒரு காடு வெட்டி குரு... எனது முகநூலிலிருந்து... 22


பால் தாக்கரே யாருன்னு புரியிறாப்புல சொல்லுங்கன்னு மார்க்கெட்டுல மூட்டை தூக்குறவரு கேட்டாரு.

'ம்... வந்து... பாம்பேல இருக்கிற ஒரு காடு வெட்டி குருன்னு' சொன்னேன்.





000


ஆங் சான் சூச்சி...

மியான்மருக்கு ஒரு பிரதிபா பாட்டியின் பிரதி. ஆனா, கொஞ்சம் ஆக்டிவ். இந்தியாவுல எலிவளை தோண்டி, மியான்மருக்கு ரிலையன்ஸ் ரூட்டு போடுவாங்க போலிருக்கே!!

000

சினிமா கிசுகிசு, வம்பு, அரட்டை இத்யாதிகளையே நம்பி பொழைப்பை ஓட்டும் குமுதம், ஆனந்த விகடன் வகையறாக்களுக்கு, ஹிந்துஸ்தான் லீவர், ப்ராக்டர் அண்ட் கேம்ப்ள், ஹார்லிக்சு, போன்விட்டா அட்வெர்டைஸ்மெண்ட்டுகள்.

பட், ஆனா, சமுதாய மாற்றம் (!) ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அரசியல் குற்றங்களை அலசும் இன்ஸ்வெஸ்டிச்கேஷன் (அடங்கொய்யால, வாய்ல வரமாட்டேங்குது...) பத்திரிகைகளான ஜூனியர் விகடன், நக்கீரன், ரிப்போர்ட்டர் வகையறாக்களுக்கு மட்டும், வெறும் விரைக் கொட்டை வீக்கம், மூலம், சளி, ஆண்மைக் குறைவு வியாதிஸ்தர்களுக்கான முழுப் பக்க விளம்பரங்கள். இத்தனைக்கும் வாரந்தவறாம, நடுப்பக்கத்துல ஒரு சினிமா நடிகை தொப்புளை பப்பரக்கான்னு காட்டிக் கொண்டிருந்தாலும் பப்பு வேகலை.

ஏண்டா, ஏன்?!

000

புரசைவாக்கத்துல ஒரு சுமோ வளைஞ்சு நெளிஞ்சு ரோட்டுல முறுக்கு சுட்டுக்கிட்டே போய்ட்டு இருந்தது. பின்பக்க பம்பர்ல, 'யெஸ். ரோட் ஈஸ் மை பிளே கிரவுண்ட்' அப்படீன்னு ஒரு வாசகம். ஓவர்டேக் பண்ணிப் பார்த்தா, முன்னாடி கட்சிக்கொடி பறந்துகிட்டு இருந்துச்சி. உள்ற வெள்ளையும் சொள்ளையுமா நாலு பேரு. டிரைவர் கண்ணாடியத் தட்டினேன். கண்ணாடிய இறக்குன உடனே சொன்னேன். "அதோ அங்க, உங்க வண்டியோட பம்பர் கழண்டு விழுந்துறுச்சி' அப்படீன்னு. வண்டியை ஓரங்கட்டி ரெண்டுபேரு பம்பரைத் தேடி ஓடினாங்க. நானும் எடத்தை ஒடனே காலி பண்ணிட்டேன்.

ஸ்பாட் ஃபைன் போலீஸ்காரவுங்க குடுக்கறது. நம்பளோடது ஸ்பாட் பனிஷ்மெண்ட்டு!

000

போத்தீஸ் துணிக்கடை, நாதெள்ளா நகைக்கடை, ஹார்லிக்ஸ், காம்ப்ளான், வாஷிங்க் பவுடர், அப்பளம், நல்லெண்ணை, பருப்பு விளம்பரங்களுக்கு நடித்துக் கொடுக்கும் பணக்காரச் சின்னஞ் சிறுவர், சிறுமிகள், கைக் குழந்தைகள், வயிற்றில் இருக்கும் கரு... இவர்களெல்லாம் 'குழந்தைத் தொழிலாளர்கள்' இல்லையா?

வயிற்றுப் பிழைப்புக்காக டீக்கடையில் எச்சில் டம்ளர் கழுவும் ஏழைச் சிறுவர்கள் மட்டும்தான் குழந்தைத் தொழிலாளர்களா?

000

வருங்கால முதலமைச்சராகப் போகும் சிந்தனைச் சிற்பி, இளைய தளபதி, தன் துப்பாக்கி படக்காவியத்தில் ஏன் ஒரு கிருத்துவனை தீவிரவாதியாகக் காட்டியிருக்கக்கூடாது? ஓ, அவரே ஒரு கிருத்துவர் என்பதை நான் மறந்துவிட்டேன்!

000

தர்மபுரி அருகே தலித்துக்களுக்கு எதிரே நடந்த வன்முறைகளுக்கு பாமகவும், அதன் துணை அமைப்பான வன்னியர் சங்கமும் முதன்மையான காரணங்களாக செயல்பட்டுள்ளன. ஒரு வேண்டுகோள்!பாமக நிறுவனர் 'ஐயா ராமதாஸ் அவர்கள்' சாதி ஆதிக்கவாதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி கலவரத்துக்கு தமிழக அரசே பொறுப்பு! - திருமாவளவன் பேட்டி!

அண்ண வச்சிருந்தது பென்சில்ல வரைஞ்ச மீசைடான்னா, யாருமே ஒத்துக்கமாட்டேங்குறீங்க...

000

இல்லாத ஒரு கடவுளை அடித்துத் துரத்துவதற்கான, இந்த விஞ்ஞான யுகத்தின் முயற்சிகளும்கூட பெருமளவில் தோல்வியுறுகின்றன. உண்மைகள் சுலபத்தில் பொய்ம்மையாக்கப்படுகின்றன. கடவுளைத் தோற்கடிப்பதில் விஞ்ஞானத்துக்கு 'ஜான் ஏறினால், முழம் சறுக்குகிறது.' ஆனால் விஞ்ஞானத்தின் எதிரிகள் வெறும் ஸ்வாஹா சொல்லியே கடவுளை 'நல்லா ஏத்தி விடுகிறார்கள்.' சட்டப்படியும் உலகத்தின் எந்த அரசும் கடவுளை கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள முன் வரவே வராது. இந்தக் கணக்குப்படிப் பார்த்தால், கடவுள் இன்னும் ஒரு நூறு இரு நூறு ஆண்டுகள் 'இருந்து' விட்டுத்தான் போவார் போலிருக்கிறது! கலிகாலம்டா சாமி!!

000

நாடார் சமுதாய மக்கள் மீதான தடியடிக்கு கண்டனம்: ராமதாஸ்

நாடார்களின் வரலாற்று உண்மைக்கு மாறான பகுதிகளை பாடப்புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் - திருமாவளவன்.

தலித்துகள் 'டிஷ்யூ பேப்பரான' கதை இப்போதைக்கு 'பெண்டிங்குலயே' இருக்கட்டும் கண்ணுஙகளா. அது எங்க ஓடிப் போயிடப் போவுது? நாடார்களை எப்படி 'கர்சீஃப்' போல பயன்படுத்தலாம் என்பதுதான் இங்கே தலையாய, கவுரவமான பிரச்சினை! 

தலீவருங்க எப்பூடி கோத்துக்குறாங்கன்னு பாருங்கண்ணே!!

000

மாலை மலர் நியூசு :

வெளிநாட்டில் கணவர்: பட்டப்பகலில் காதலனுடன் கும்மாளமிட்ட இளம்பெண்- ஊர் மக்கள் எதிர்ப்பு, முற்றுகை : 

திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தனியாக வாழ்ந்த கவிதாவும், அவரது நண்பரான ஆறுமுகமும் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) நெருங்கி பழகினர். கவிதாவி
ன் வீட்டுக்கு ஆறுமுகம் அடிக்கடி வந்து சென்றார். காலையில் வரும் ஆறுமுகமும் கவிதாவுடன் கும்மாளமடித்து விட்டு மாலையில்தான் வீட்டுக்கு செல்வார். Blaa... blaaaaa, blaaaa.

மனசாட்சி தொட்டு சொல்லுங்க எசமான்.
குத்தவாளியோட பெயரையே (பிராக்கெட்டுல) மாத்திப் போடுற 'குடுப்பினை' ஒரு சாதாரண ரிக்சா தொழிலாளிக்கு கிடைச்சிடுமா என்ன? பணம் 'பிரஸ்' வரையிலும் பாயும்!
நாலந்தரத் தூண்ணே!!!





000





தாக்கரே...

பீகாரிகளைத் தேடித் தேடி
தாக்கப்படாத வகையிலே...
உங்கள் 'சாம்னா'
சாந்தியடையட்டும்!





000





நம்மோட நாளைய முதல்வர் விஜய், முதல்வரான பொறவு, அண்ணா சாலை சந்திப்புல, பார்த்துப் பார்த்து, ஒரு வரி விடாம படித்து, பேருரை ஆத்திட உதவும் 'பிட்டு' உபயம் சாணக்கியன் எஸ் ஏ சி.

என்ன பெட்டு கட்றீங்க?!





000





எண்ணை தடவிய பளபள பிஸ்டலுடன் தோயர் தாபா.

என்ன சொன்னே?
சுத்தி, அருவாவா?
யாரு... அண்ணங்கிட்டயேவா?
பேசு. இப்ப்ப்ப்பப் பேசு.
ஜோடி போட்டுக்கிறுவமா ஜோடி...!!





000





பால் தாக்கரே 'பிரெஞ்சு தாடி' வச்சிருந்ததால, நம்ம நாட்டு மூவர்ணக் கொடியை போர்த்தி இருப்பாங்களோ?





000









கதை 'நாட்டு' கிடைச்சிடுத்து!

மணி ரத்னம் மல்லாக்கப் படுத்துக்கிட்டு சீன்-பை-சீனா திங்க் பண்ணுவாரு.

பால் தாக்ரே = பால் நாயக்கர்.
கதா நாயகன் = ரஜினி காந்து ( அவர்தானே மிஸ்டர் பாலை எங்க அப்பா மாதிரின்னு சொன்னவரு. யூஸ் பண்ணிக்க, ராசா.)
முசுலீம் பசங்களை ஈசியா தீவிரவாதியா காட்டிடலாம். மெனக்கெடத் தேவையில்லை!





000






13.11.12

அய்யரோட ஸ்ப்ளெண்டர் மைலேஜே குடுக்கலை!... எனது முகநூலிலிருந்து... 21

கடேசில, அய்யரோட ஸ்ப்ளெண்டர் மைலேஜே குடுக்கலை!

000

"இதோ இது ஈர அரிசி. அதிரச மாவு; அதோ அந்த அலுமினியத் தூக்கு, முறுக்கு மாவு. எங்கண்ணு இல்லே, நீதான் என் ராசாக் குட்டியாம். மாவு மிஷினுக்கு போயி அரைச்சிட்டு வந்துடுவியாம்." - தீபாவளிப் பட்சணத்துக்கான அம்மாவின் ரிக்வெஸ்ட். ஏழு கடா வயசு ஏதிஸ்டான என்னால் மறுக்க முடியவில்லை!!

000

2ஜி' ஸ்பெக்ட்ரம்: ரூ.9 ஆயிரத்து 225 கோடிக்கு ஏலம் போனது - தினமலர்.

சிண்டிகேட் ஜிந்தாபாத்! (நம்மூரு மதுக்கடையை ஏலம் விடும் முறையை ஃபிளாஷ்பேக்கில் ஓடவிடவும்). ஆண்டிமுத்து ராஜா பக்கம் ஞாயம் கீதுபா அப்படீன்னு சொல்லத் தோணுமே?

000

தீபாவளி வாழ்த்து இப்படியும் இருக்கலாம்:

"நல்லெண்ணை நல்லெண்ணத்தை வளர்க்கும். தலைக்கும் குளிர்ச்சி தரும்; முடி வளரும். ஈழம் மலரும். சமத்துவம் பிளிரும். தீப ஒளியில் நல்லெண்ணை தேய்த்துக் குளித்து கும்மாளமிட்டு, புது உற்சாகம் பெற, இந்த தீப ஒளித் திரு நாளில் உடன் பிறப்புக்கள் யாவரும் சபதம் ஏற்போம். (யோவ், இதை ஒரு காப்பி எடுத்து அழகிரிக்கும் அனுப்பிடு. ஆ வூன்னா கோச்சிக்கிறாரு...)" - தானைத் தலைவன், கர
ுஞ்சட்டைமேல் மஞ்ச துண்டு சுற்றி அழகு பார்த்த பெரியாரின் பேரன், அண்ணாவின் தம்பி, கலைஞர்.

"பவர் கட் சமயத்தில் கரண்ட்டு வந்தால் எப்படிச் சந்தோஷம் பொங்குகிறதோ, அத்தகைய மகிழ்ச்சியை 'கட்' இல்லாமல் இலவசமாகப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை இந்த இனிய தீபாவளி நன்னாளில் பிரார்த்திக்கிறேன்." - அன்புள்ள அம்மா.

"தங்கத் தாரகை, ஈழத்தாய், மாண்புமிகு அம்மா தீபாவளி வாழ்த்தா என்ன சொன்னாங்களோ அதையேதான் நாங்களும் வழி மொழிகிறோம். அம்மா நாமம் வாழ்க!" - மந்திரிப் பட்டாளங்கள்.





000





உண்மையச் சொல்லுங்க தலிவரே, தீவாளி அன்னைக்கு எண்ணை தேய்ச்சு குளிச்சு, தரையில விழுந்து சாமி கும்பிடுவீங்கதானே? தீப ஒளித் திருநாள் அப்படீன்னு உங்க கலைஞர் டீவி வெளுத்து வாங்கறதால கேட்டேன்!





000





தீவாளி அன்னைக்கு தமிழ் நாடு பூராவும் பவர் கட்டு இருக்காதுங்கறேன். சாமி குத்தமாய்டும் அப்படீங்கறது ரெண்டாம் பட்ச்சம்தான்! எல்லா சானல் நிகழ்ச்சிகளையும் 'வயங்குபவர்கள்' நண்டு மார்க் லுங்கியிலிருந்து, ஓடாபோன் நாய்கள் வரை என்பதே உண்மை. துட்டுணே, துட்டு!





000





அப்புக் குள்ளன் கேரக்டர் எப்படிக் குள்ளமா இருந்துச்சி அப்படீன்னு அப்பவே ஒலக நாயகன் விளக்கி இருக்கலாம். அது என்னவோ பெரிய்ய கம்ப சூஸ்திரம் மாதிரி இவுரு கம்முன்னு கிடக்க, இப்பத்தி மூணாங்கிளாஸ் பையன் சீன் பை சீனா ரகசியத்தை புட்டுப் புட்டு ஒடைக்கிறான். கமலு, மொதல்லியே மருவாதியா சொல்லியிருக்கலாமில்லே? இப்போ பார், அசிங்கமாப் போயிடுச்சி!





000





'சேரியிலேயும் ஐய்யர் இருந்திருப்பார் எனும் ஒரே நம்பிக்கையில்தான் Splendor ஐய்யர் என்று பெயர் வைத்தோம்' அப்படீன்னு ஹீரோ கம்பெனி ஜெர்க்கு வாங்கியிருக்கலாம்.





000





"வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா..." - பதினெட்டு 'பொட்டி' ராசா, காடு வெட்டி குரு.

அப்போ, வன்னிய இன ஆண்கள் கலப்புத் திருமணம் செய்துக்கிட்டா, 'நறுக்கிடலாமா...?'





000





அன்னைக்கு, அரிசன்னு சொல்லி காந்தி தலித்துக்களை அஹிம்சா வழியில இழிவு படுத்த ஆரம்பிச்சது.... இன்னைக்கு வெட்டுங்கடான்னு காடு வெட்டி வரையிலும் தொடருது.

'நாளைக்கு ஒரே மேடையில உக்காந்தா, ராமதாசு மூஞ்சில எப்படி முழிக்கிறதுன்னு' வெட்கப்பட்டு கம்முன்னு கிடக்குற தலித் தலைவருங்க, குறைந்தபட்ச்சம் பான்-கி-மூனை ஐநாவுல சந்திச்சி, ஏதாவது ஆக்சன் எடுக்கச் சொல்லி அப்பிளிகேசன் குடுக்கலாம்!!





000





கட்சியை கலைத்து காங்கிரசுடன் இணைக்கிறேன்: 'தனித்தெலுங்கானா புகழ்' சந்திரசேகரராவ் .

இந்த டீலிங் அவருக்கு ரெம்பப் புடிச்சிருக்காம். பாவம்; கணபதி அய்யர் பேக்கரியை எவ்வளவு நாள்தான் லாபத்துல போறாமாதிரியே மெயிண்டெய்ன் பண்றது?





000





அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல, இந்த மணி ரத்னம் படத்து பாடல் மட்டும் எப்பவுமே 'எம்டிவி அன்பிளக்டுல' கோர்த்து விட்டுருவாங்க. கவுரவமாம். அப்புறம், படத்துமேல ஒரு இது வருமாம்! இதுக்கு மின்னாடி, தளபதி படம் ராக்கம்மா கையத் தட்டு பாட்டுதான் உலகத்திலியே அதிகமா கேக்கப்பட்டதுன்னு பிபிசிய வச்சி ஒரு புருடா வுட்டாங்க. மேலிடத்து விவகாரம்; யார் யாரைக் காக்கா புடிச்சா இது நடக்கும்னு அவங்களுக்கு தெரியுது. ஒசந்த சாதி இல்லையா? பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடறான். 





000





கடேசி பேருந்து புறப்படும் நேரத்தில் ஞாபகம் வந்தது... ஈறு நம நமங்குதுன்னு பத்து ரூபாய்க்கு காராசேவு கேட்ட ஆயாவின் கோரிக்கை. பேருந்தை விட்டால் கோயிந்தா. சரம் சரமாய்த் தொங்கியிருந்த 'லேய்ஸ்' ரெண்டு பாக்கெட்டு பிய்த்து எடுத்துக்கொண்டு, பத்து ரூபாயை கடைக்காரன் கையில் திணித்துவிட்டு, நான் பேருந்தில் திணிந்துகொண்டேன்.

மறு நாள் காலையில் ஆயா வீட்டு வாசலைப் பெருக்கிகொண்டே என் காதுக்கு விழும்படி சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. "செறிக்குமாடா அந்த பத்து ரூபா...! வாந்தி பேதி வந்து வாறிக்கிட்டு போவ... மூணு மூணா எண்ணி வெச்சிருக்கானுங்க. பொறம்போக்குப் பசங்க."

நல்ல வேளை, ஆயா என்னைத் திட்டலை!





000





தென் மாவட்ட சாதி வெறியர்களுக்கு வெற்றி மேல் வெற்றி. கொளுத்தி போட்டுவிட்டு குளிர் காயும் அரசியல் பொறுக்கிகள். அரசு சோடை போனதா அல்லது துணை போனதா?





000





'ஹையங்காரால்' மட்டுமே முடியும் என்று சின்மயியிசம் மகிழும்.

சி.வி. ராமன் பிறந்த நாள்.





000





கப்பல் ஊழியர்களை துணிந்து காப்பாற்றிய 5 மீனவர்களுக்கு தலா ஒரு லட்சம். மெத்தனமாய் இருந்த இந்தியக் கப்பல் படைக்கு எவ்வளவு அபராதம்?





000





"One must divide one's time between politics and equations. But our equations are much more important to me, because politics is for the present, while our equations are for eternity." -Albert Einstein...

என்னைய்யா, இந்தாளு இப்படிக் குழப்பறாரு?

அல்ல்லோ மிஸ்டர் எய்ன்ஸ்டின், ஈக்குவேஷன் மட்டும் படிச்சா நாக்குத்தான் வழிக்கணும். பாலிடிக்ஸ் பாலபாடமாவே இருக்கணும் காணும். சோறு திங்கணுமில்லே?!





000





Obamaa........


சரி. வந்துட்டாரு. இனிமே வீட்டுக் கடன் அடைஞ்சிடுமா; வீட்டை திருப்பிக் குடுத்துடுவாங்களா; இல்லே தெருவுலதான் நிக்கணுமா; புதுசா எந்த நாட்டை பதம் பாக்கப் போறாரு?... ஒரு நல்ல சீட்டா எடுத்துப்போடு தாயி...

6.11.12

மூக்குல மாவுக்கட்டு... எனது முகநூலிலிருந்து... 20

வலுக்கட்டாயமா, தெருவுல போகிற கொய்ந்திக்கு கூட ஷோபான்னு தன்னோட அம்மா பேரை வைக்கிறான் ஒருவன். ஆனா, இந்த மர்மக் காய்ச்சலுக்குத்தான் ஒரு பேரை வைக்க முடியல்லே. பேசாம இதுக்கு "அம்மா காய்ச்சல்" அப்படீன்னு பேர் வெச்சுடலாமா?!

000

டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டணம் உயராது - அன்புள்ள அம்மா.

இந்த நல்ல செய்திய படிக்கும்போதுதான், யாரோ அபசகுனமா தும்முற சவுண்டு கேக்குது. வுட்டு ஏத்திருவாங்களோ?!

000

அஜ்மல் கசாப்புக்கு டெங்கு காய்ச்சல்...

ஏதாவது எக்குத் தப்பா ஆனாக்கூட, பாகிஸ்தான்காரனுங்க ஏன்னு ஒரு கேள்வி கேக்க முடியாது!!

000

'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' - டெங்கு கொசு.

000

லண்டன்: இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு சர்வதேச தீர்ப்பாய விசாரணை கோரி லண்டனில் நாளை தொடங்கும் உலகத் தமிழர் மாநாட்டில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா. பாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

டி.கே.எஸ். இளங்கோவன்!! கணக்கு உதைக்குதே...! தோயர் தபாவுக்கு இங்க என்ன வேலை? அம்மா திட்டுவாங்க. ஓடு, ஓடிடு.

000

கல்வியை தனியார் மயமாக்கி காசு பார்த்ததில் முன்னோடி துரோகிகள் கிருத்துவ மிஷினரிகள்தான். சர்ச் பார்க் 1842. கிரிஸ்டியன் காலேஜ் 1837. லயோலா 1925.

000

நேத்து, விஜை டிவியில வால்மார்ட் வரவு, அன்னிய முதலீடு குறித்து 'அனல் பறக்காத' விவாதம் நடந்தது. வால் மார்ட் எதிர்ப்பாளர்கள் 'கொஞ்சம் லைட்டா அமுக்கி' பேசியதற்காகவே, தீக்கதிர் ஆசிரியருக்கும், நாகப்பனுக்கும், கிஃப்ட் வாவுச்சரும் பரிசு பாக்கிட்டும் குடுத்திருப்பாங்களோன்னு சந்தேகம். எதையும் சந்தேகப் படு. ஏன்னா, நிகழ்ச்சியை நடத்தியது விஜை டிவியாச்சே!!

000

டெங்குவை மர்மக்காய்ச்சல் என்று மாற்றிக் கூறுவதும், காதலர் கொலைகளை கருணைக் கொலை என்று விளிப்பதும் சரியென்றால்... திருட்டு அல்லது ஊழலை 'சந்தர்ப்பத் தவறு' என்றும், வறுமையில் உழல்பவனை 'விதியால் நொந்தவன்' என்றும் கூறிவிடுங்களேன்? உங்கள் அம்மாவை 'அப்பனின் மனைவி' என்று விளிப்பதும் சாலப் பொருந்தும். நீங்க பேப்பர் விக்கறதுக்கு பதில் பிச்சை எடுக்கலாம்; கவுரவமா இருக்கும்!

000

பீஜிங் - "அணுசக்தி மூலம், 20 ஆயிரம் மெகா வாட், மின்சாரம் தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது,'' என அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

இப்போ சீனா, அமெரிக்கான்னு சுத்துறவரு இப்படித்தான் பேசுவாரு. பிற்காலத்துல 'கூடுவாஞ்சேரி குபேரன் துணிக் கடை' திறப்புவிழாவுக்கு ரிப்பன் வெட்டுற காலகட்டம் வரும். அப்போ வேறமாதிரி பேசுவாரு பாருங்க!

000

"திருப்பதி, திருமலை கோவிலில், வெங்கடேச பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள், சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும் என்ற நிபந்தனை, விரைவில் கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.'' - தேவஸ்தான நிர்வாக அதிகாரி.

அப்படிப் பார்த்தா, 90% கோவணம்தான் சம்பிரதாய உடையில் கியூவுல நிக்கும். ஒருத்தர் பின்னால ஒருத்தர்! பார்க்க ரொம்ப ஆபாசமா இருக்குமேய்யா!!

000

தமிழக காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் 5,000 போலீசார், "ஆர்டர்லி' (எடுபிடி) வேலை செய்கின்றனர். போலீஸ் வேலையே செய்யாத இவர்களுக்கு, ஆண்டு தோறும் 120 கோடி ரூபாய் வரை, அரசு கஜானாவில் இருந்து ஊதியமாக வழங்கப்பட்டு, நிதி வீணடிக்கப்படுகிறது. 

அந்த அம்மா சொன்னா, வெங்காயம் தக்காளி வாங்கி வரணும்; இந்த அம்மா சொன்னா, 'வெங்காயம் தக்காளி விலைய ஏன் எத்தினீங்கன்னு' போராட்டம் பண்றவங்களை வெளுத்து வாங்கணும். மொத்தத்துல அம்மாவோட அடிமைங்க!

000

"நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வெளியிட்ட நிறுவனத்திற்கு, காங்கிரஸ் கட்சி, 90 கோடி ரூபாய் கடனாக வழங்கியுள்ளதால், அந்த கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி, தேர்தல் ஆணையத்தை அணுகி உள்ளார், ஜனதா கட்சித் தலைவர், சுப்ரமணிய சாமி. 

ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு. ஆனா உங்கிட்ட பினிசிங் சரியில்லையேப்பா. சரி, சரி. இவரை பெர்பாமன்ஸ் பண்ண விடுங்கடா!

000

வரும் தீபாவளியன்று சரக்கு விற்பனை 125 கோடிக்கு இலக்கு...

எப்படி சரக்கை கலக்கணும்... எப்படிக் குடிக்கணும்... பிராந்தி என்றால் என்ன, விஸ்கி, ரம் என்றால் என்ன, எதில் போதை அதிகம்... அப்படீன்னு ஒண்ணாங்கிளாஸ் பாடப் புஸ்தகத்துலயே ஒரு பாடமும் (விளக்கப் படங்களுடன்) வச்சிட்டா, பிற்காலத்துல நம்ம சந்ததிங்க மிகச் சிறந்த குடிமகனா இருப்பாங்க. அரசு ஆவன செய்யுமா?

000

வழக்கு போட்டால் கோர்ட்டுக்குத்தான் செல்ல முடியும் : முதல்வருக்கு தே.மு.தி.க., பதில்.

இல்லைன்னா... அப்பொல்லோவுக்கு போகணும். மூக்குல சளின்னுட்டு மாவுக்கட்டு போட்டு பிடிவாரண்ட்டு முடியிற வரைக்கும் படுக்க வச்சிருவாங்க!

000

கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல முடியுமா? : சிங்கப்பூர் நிபுணர் குழு சென்னையில் நேரில் ஆய்வு.

அவங்களால முடியலைன்னா, 'அண்ணா ஆர்ச் புகழ்' எஞ்சினீயருங்களைக் கூப்பிடுங்க. எல்லாம் நல்லபடியா ஆய்டும்!

000

"நாடு முழுவதும், பூரண மதுவிலக்கை மத்திய அரசு அமல்படுத்தினால், தமிழகத்திலும் அமல்படுத்துவதற்கு தயார். ஆனால், பக்கத்து மாநிலங்களில், அனுமதித்து விட்டு, இங்கே அனுமதி மறுத்தால், கள்ளச்சாராயம் பெருகும்,'' - அமைச்சர் விஸ்வநாதன். 

குடிகாரன் பேச்சு மாதிரி தெரியலாம். ஆனா 'பொழுதுவிடிஞ்சா போச்சு' இல்லை. 'அம்ச்சர்' அரசாங்கத்தோட வாய்மையை அப்படியே பிழியிறாரு!






2.11.12

அப்பாவி தலைல மொளகா பட்டாஸ்... எனது முகநூலிலிருந்து... 19

நித்தி ஆசிரமத்தை அரசு ஏற்க முடிவு!

அப்போ ரஞ்சிதா?

000

'மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராடுவேன்' அப்படீன்னு விஜயகாந்த் சொன்னா நம்புவீங்களா? 

அதுபோலத்தான் இதுவும்.

பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக மாற்றுவேன்: புது வரவு மத்திய அமைச்சர் சிரஞ்சீவி.

000

வழக்கு போட்டால் கோர்ட்டுக்குத்தான் செல்ல முடியும் : முதல்வருக்கு தே.மு.தி.க., பதில்.

இல்லைன்னா... அப்பொல்லோவுக்கு போகணும். மூக்குல சளின்னுட்டு மாவுக்கட்டு போட்டு பிடிவாரண்ட்டு முடியிற வரைக்கும் படுக்க வச்சிருவாங்க!

000

"நாடு முழுவதும், பூரண மதுவிலக்கை மத்திய அரசு அமல்படுத்தினால், தமிழகத்திலும் அமல்படுத்துவதற்கு தயார். ஆனால், பக்கத்து மாநிலங்களில், அனுமதித்து விட்டு, இங்கே அனுமதி மறுத்தால், கள்ளச்சாராயம் பெருகும்,'' - அமைச்சர் விஸ்வநாதன். 

குடிகாரன் பேச்சு மாதிரி தெரியலாம். ஆனா 'பொழுதுவிடிஞ்சா போச்சு' இல்லை. 'அம்ச்சர்' அரசாங்கத்தோட வாய்மையை அப்படியே பிழியிறாரு!

000

கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல முடியுமா? : சிங்கப்பூர் நிபுணர் குழு சென்னையில் நேரில் ஆய்வு.

அவங்களால முடியலைன்னா, 'அண்ணா ஆர்ச் புகழ்' எஞ்சினீயருங்களைக் கூப்பிடுங்க. எல்லாம் நல்லபடியா ஆய்டும்!

000

"தீபாவளி பண்டிகை நேரத்தில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களின் உரிமம் ரத்து செய்யப் படும்,'' - அமைச்சர் செந்தில் பாலாஜி.

தீபாவளி வரத்தான் போவுது; ஆம்னிக்காரவுங்க அப்பாவி தலைல மொளகா பட்டாஸ் வெடிக்கத்தான் போறானுங்க; நாங்களும் பாக்கத்தானே போறோம்... எத்தனை ஆம்னி பஸ் உரிமம் ரத்தாவுதுன்னு?

000

அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை : சு.சாமிக்கு ராகுல் எச்சரிக்கை.

கோந்தே, நீ ஆளும் கட்சின்னுட்டு அந்தாளுமேல பாயாத. அவரு அதுக்கும் மேல. அதிகார வர்க்கம். வணங்கிப் போகலைன்னா, உனக்கும் திகாருக்கு வழி சொல்லிப்பிடுவாரு!

000

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி நினைவுநாள் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்தி அறிக்கையில், "அன்னை சோனியா காந்தியின் 28-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு" என்று தவறுதலாக அனுப்பி...

பட்டாபட்டியோட பத்து நாளைக்கு பெஞ்சுமேல நிக்கவைக்கணும். இவங்களை நம்ப முடியாது, சோனியாஜி.

நீங்க இனிமே 'அன்னை அன்டொனியோ மைனா...' அப்படீன்னே காங்கிரஸ்காரவுங்களை கூப்பிடச் சொல்லுங்க!

000

சட்டசபைக்கு வைர விழா. 

அம்மே, அந்த டிபன்-பாக்ஸ் பில்டிங்கை சுத்தி, முல்லைக் கொடியை ஏற்றிவிடுங்க. 
'முல்லைக்குச் சட்டசபையையே ஈன்றுவிட்ட கொடை வள்ளல் இந்தத் தமிழ்த்தாய்...' என்று நீங்கள் அன்போடு அழைக்கப்படுவீர்கள்!

000


சவால்களை உறுதியுடன் எதிர்கொள்ளுங்கள் - -மத்திய மந்திரிகளுக்கு மன்மோகன் அறிவுரை.

திருடினா, நாலு பேரு கெட்டகெட்ட வார்த்தைல வையத்தான் செய்வான். அதையெல்லாம் நைசா தூக்கிப் போட்டுட்டு, கருமமே கண்ணாயிருக்கணும்னு சொல்றாரு!

000

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடுவது தேசிய அவமானம்: பால்தாக்கரே.

இன்னொரு முறை சொன்னீங்கன்னா, 'போய்யா யோவ், எங்களுக்கு தேசியமும் வேணாம்; ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம். இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் இருந்தா போதும்...' அப்படீம்பாங்க. அப்புறம் சிங்கத்துக்கு அசிங்கமாயிடும்!

000

பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கில் மனோகரனுக்கு தூக்கு தண்டனை; 3 ஆயுள் தண்டனை...

சங்கர்ராமன் கொலைக்கு பிந்தி வந்த கேசு. எவ்வளவு விரைவா முடிச்சிருக்காங்க பாருங்க. நாம நீதித் துறையை 'வாய்த்தினாலும்', சங்கர்ராமன் ஆவி மன்னிக்காது போலிருக்கே?!

000

அமெரிக்காவுல ஒரு சாண்டி வீசுனா, இந்தியாவுல ஒரு நிலம் வீசியாகணும். ரெண்டு நாடும் அவ்ளோ அன்நோன்யம்!

000

பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கில் மனோகரனுக்கு தூக்கு தண்டனை; 3 ஆயுள் தண்டனை...

மதுரை தினகரன்ல ரெண்டு பேரை போட்டுத் தள்ளினாங்களே, அவுங்களுக்கு என்ன தண்டனை குடுத்தாங்கன்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கண்ணே!

000