My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

30.9.12

எனது முக நூலிலிருந்து... 16


மளிகைக்கடைகளில் எச்சரிக்கை போர்டு : பிளாஸ்டிக் பைகளை வாங்குவதும், கொடுப்பதும் குற்றம். ஒரு வருடம்வரை சிறை அல்லது அபராதம்...ப்ளா, ப்ளா, ப்ளா... ஆனால், அதே மளிகைக் கடை, பெட்டிக்கடை முகப்புகளில் லேய்ஸ், கெல்லாக்ஸ், குர்குரே போன்ற பன்னாட்டு கம்
பேனி நொறுவைகள் சரம் சரமாக தொங்குகின்றன. இந்தப் பாக்கெட்டுகளெல்லாம் என்ன தங்கத்தால் செய்யப்பட்டதா; அல்லது இந்தச் சட்டம் இவர்களுக்குப் பொருந்தாதா; அல்லது சட்டமியற்றிய பக்கிகளின் கண்களுக்கு இந்தத் சரங்கள் படவில்லையா?!





000





சட்டமன்ற சபாநாயகர் ஜெயக்குமார் ராஜினாமா.

கவுரவமான போஸ்ட்டுதான்; ஆனா ஒரு மனுஷனால, நாள் பூரா குனிஞ்சமேனிக்கே, அதுவும் மேற்படி வரும்படி ஏதுமில்லாம, வெத்துக் கல்லாவுல எவ்வளவு நாள்தான் உக்கார முடியும்?





000





கிரானைட் குவாரியில 'வ்ளாண்டுக்கிட்டு' இருந்த குழந்தைய காணமின்னு, அஞ்சா நெஞ்சன், நெஞ்சில மஞ்சாசோறு இல்லாம பேண்டுகிட்டு கெடக்காரு. இப்பம்போயி, எழவு வீடாட்டம் கிடக்குற மதுரைக்கு தளபதிய அனுப்பி; அவருக்கு வரவேற்பு சரியில்லைன்னு சொல்லி..., தலீவா, இதெல்லாம் நல்லாவா இருக்கு? எதிர்க்கட்சிக்காரன் நம்பள பத்தி என்ன நெனைப்பான்?!!





000





நம்ம திட்டக் கமிஷன் அலுவாலியா கணக்கு இதுதான். இதுக்கு மேல் ஒத்த பைசா செலவு செய்யுறவன் ஒரு மானங்கெட்ட ஈத்தரை இந்தியனாத்தான் இருப்பான். ங்கொய்யால, பணம் இன்னா மரத்துலயா காய்க்குது?!

அரிசி அல்லதுகோதுமை - ரூ.5.50
பருப்பு வகைகள் - ரூ.1.02
பால்- ரூ.2.33
சமையல் எண்ணெய்- ரூ.1.55
காய்கறிகள்- ரூ.1.95**

**கண்டிசன் அப்ளை
(ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இரண்டாவது முறையாக பதவியேற்று, மூன்று ஆண்டுகள் நிறைவடைந
்ததை ஒட்டி, பிரதமர் மன்மோகன் சிங், அளித்த விருந்திற்கு, 28.95 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பிரதமரின் இல்லத்தில் நடந்த, விருந்து நிகழ்ச்சிக்கான பூ அலங்காரத்திற்காக, 26 ஆயிரத்து 444 ரூபாயும், பந்தல் அமைப்பதற்காக, 14 லட்சத்து 42 ஆயிரத்து 678 ரூபாயும், விருந்தில் வழங்கப்பட்ட உணவிற்காக, 11 லட்சத்து 34 ஆயிரத்து 296 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.அதாவது, ஒரு நபர் சாப்பிட, "பிளேட்' ஒன்றுக்கு, 7,721 ரூபாய்.





ஆனா, மன்மோகனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் தாராளமா செலவு செய்யலாம். ஏன்னா, அவர் ஒரு அமெரிக்க இந்தியர்!)





000





தேவைப்பட்டால் அணுஉலை பாதுகாப்பு அம்சங்களை மறுஆய்வு செய்ய தயார்: ஜெயந்தி நடராஜன்.

ஆண்ட்டி... பாதுகாப்பெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அணுவுலை 'ஒப்பந்தங்களை' மறு ஆய்வு செய்யயத் தயாரா...?! அதாவது 'அக்ரீமெண்ட்டு.' அத்தைச் சொல்லுங்க ஆண்ட்டி!





000





"ஜெயலலிதாவின் அறிவுரையைக் கேட்டு, எழுதுவதை நிறுத்துகின்ற எண்ணம் எனக்கில்லை.'' - கருணாநிதி.

தலைவா,
நீங்க எடுத்த முடிவு கொஞ்சம்கூட சரியில்லை.
எண்ணற்ற மண்ணெண்ணை தற்கொலையைத் தூண்டிவிடுகிறீர்கள்!
1. அலைக்குரல் விளக்க உரை,
2. கனித் தமிழ்,
3. ஆண்டிமுத்து ராஜர்,
4. தென்பாண்டி மலைக்கள்ளன்
முதலிய காவியங்களைப் படைத்தபின், உங்கள் பேனாவின் குரலை நெறித்துவிடுங்கள்.
இது தொண்டர்கள் மீது ஆணை!!

000

இந்து சமய அற நிலையத்துறை, பெரிய பாளையம் திருக்கோயில். மாண்பு மிகு அம்மா அவர்களின் 'பிளாட்டினம் அட்டை' திட்டம் : அம்மாவின் அன்னதான திட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்குபவருக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் 20 வருடத்துக்கு ஸ
்பெஷல் தரிசனம் மற்றும் கோயில் உயர் கட்டணக் குடில்களில் 10 பேர் இலவசமாக தங்கிக்கொள்ளலாம்.

'அடிப்பாவி, ஒரு கோடியா...? எவன்னா திருட்டுப்பயதான் இந்த அட்டைய வாங்குவான்,' இந்த பேனரைப் பார்த்துவிட்டு அப்பாவி மக்கள் பதறிப்போய் அடித்த கமண்ட் இது.

இந்த பேனர் பெரியபாளையத்துக்கு சூட் ஆகாது. மயிலாப்பூர், தி.நகரில் இருக்கவேண்டிய பேனர் இது. இன்னும் ஸ்பெஷலாகச் சொல்லப்போனால், தி. நகர் நளாஸ் ஆப்பக்கடை முன்னால் இருக்க வேண்டிய பேனர் இது. ஏனென்றால் அங்கேதான் ஆப்பத்தில் தங்கம் தூவி விற்கிறார்களாம். தங்க ஆப்பத்தை தின்று ஏப்பம் விடுபவர்கள் வேண்டுமானால் பிளாட்டினம் அட்டை வாங்கலாம்!




29.9.12

தாரைத் தப்பட்டை டகரடகர டான்ஸாடி...


சம்பங்கி மாலையிட்டு,
சரஞ்சரமா வெடி வெடிச்சி,
சில்லரைய தெருவெல்லாம்
சிதறடிச்சி எறைச்சிவுட்டு,
ஊரு ஒலகமெல்லாம் அதிரதிர
வெடி போட்டு,
தாரைத் தப்பட்டை
டகரடகர டான்ஸாடி,
செலவெல்லாம் செய்ஞ்சி
சாவெடுக்கும் நேரத்திலே,
கல்லறைக்குப் போயி
கொள்ளி வைக்கும் வேளையிலே...

(கோர்ட்டு ஆர்டருக்கு நம்ம நாராய்ஞ்சாமி ஒப்பாரி...)

28.9.12

எனது முகநூலிலிருந்து... 15


ஏம்பா விக்ரமு..., அல்லாரும் ஆஸ்காருக்கு அவங்க அவங்க படங்களை அனுப்புறாங்களே; நீயும் உன் 'தெய்வத் திருமகள்' படத்தை அனுப்பி முயற்சி பண்ணக்கூடாதா? நல்லா குடுப்பாங்க, வாங்கிக்க. ஆஸ்காரைச் சொன்னேன்!

000

ஊருக்கு ஒரு 'கைப்புள்ள' இருக்கத்தான் செய்வானுங்க போல! நம்மூர்ல சீமான்னா, கர்நாடகாவுல வாட்டாள் நாகராஜு. ஒரு கொள்கையும் இல்ல; ஒரு கோட்பாடும் இல்ல. எதோ கட்சி நடத்தனுமுன்னு 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' நடத்திக்கிட்டிருக்காங்க.

000

12:25க்கு முகப்பேர் த.பா வீட்டுக்கு வந்து பிறந்த நாள் வாழ்த்து; 12:50க்கு அண்ணா ஆர்ச் விசிட்டிங். 

அதாவது, ஆப்பசைத்த குரங்கா நிற்கும் அண்ணா ஆர்ச்சை நேரடியா வந்து பார்த்தா மக்கள் கிண்டல் அடிப்பாங்க அப்படீங்கற ஒரே காரணத்துக்காகத்தான் தபாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்றாப்புல சீன் செட்டப் பண்ணிட்டாங்க அம்மா. இதையெல்லாம் புரிஞ்சிக்கத் தெரியாம, வாயெல்லாம் பல்லா சிரிக்கிறாரு நம்ம பாண்டி...

000

இந்து சமய அற நிலையத்துறை, பெரிய பாளையம் திருக்கோயில். மாண்பு மிகு அம்மா அவர்களின் 'பிளாட்டினம் அட்டை' திட்டம் : அம்மாவின் அன்னதான திட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்குபவருக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் 20 வருடத்துக்கு ஸ
்பெஷல் தரிசனம் மற்றும் கோயில் உயர் கட்டணக் குடில்களில் 10 பேர் இலவசமாக தங்கிக்கொள்ளலாம்.

'அடிப்பாவி, ஒரு கோடியா...? எவன்னா திருட்டுப்பயதான் இந்த அட்டைய வாங்குவான்,' இந்த பேனரைப் பார்த்துவிட்டு அப்பாவி மக்கள் பதறிப்போய் அடித்த கமண்ட் இது.

இந்த பேனர் பெரியபாளையத்துக்கு சூட் ஆகாது. மயிலாப்பூர், தி.நகரில் இருக்கவேண்டிய பேனர் இது. இன்னும் ஸ்பெஷலாகச் சொல்லப்போனால், தி. நகர் நளாஸ் ஆப்பக்கடை முன்னால் இருக்க வேண்டிய பேனர் இது. ஏனென்றால் அங்கேதான் ஆப்பத்தில் தங்கம் தூவி விற்கிறார்களாம். தங்க ஆப்பத்தை தின்று ஏப்பம் விடுபவர்கள் வேண்டுமானால் பிளாட்டினம் அட்டை வாங்கலாம்!


000

கருணா நிதிக்கு பாரத ரத்னா - திமுக பரிந்துரை. 

அட கூமுட்டைகளா... போயும் போயும் லோக்கலுக்கு ஆசைப்பறீங்களே. தலிவர் ஃபேசு ஃபோர்ப்ஸ் அட்டையில வரணும்; அப்படி இல்லைன்னா ப்ளேபாய்ல அட்டைப் படமா வரணும்; சிறந்த சிரிலங்கா டிராமாவுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கணும்... இப்படி ஆசைப்படுங்களேண்டா!! ஏன்னா, இதுல ஒரு 'லாஜிக்' இருக்கு.

000

உயிரை மாய்த்துகொள்வதாக இருந்தால் 
ஒரு தனுவாக மாறுங்கள் : திருமா ஆவேசம்.

தனுவா மாறப்போறவங்க அப்படியே, 'திருமா, காங்கிரஸ் துரோக கூட்டணி எம்.பி' அப்படீன்னு கையில பச்சையும் குத்திக்கோங்க. ( செத்தப்புறமா எந்தக் கட்சியை சேர்ந்தவர்னு கண்டுபுடிக்கிறது ரொம்ப ஈசி பாருங்க!!)

000

ஹாவார்டு லார்ட்டு லபக்குதாசு யூனிவெர்சிட்டியிலியே பயலுங்க காப்பி அடிச்சி பாஸ் பண்ணியிருக்காங்க. 150 பேரை புடிச்சிட்டாங்க. நாங்கதான் எகனாமிஸ்ட்டை உருவாக்குறதுல ஒலகத்துலயே பெரிய்ய மசுராண்டிங்கன்னு சொல்லிக்கிட்டு திரிந்த யூனிவெர்சிட்டிலதான் இந்தக் கேவலம். இப்ப டவுட்டு வருது. இங்கே தப்பு தப்பா கூட்டிக் கழிக்கிற சிதம்பரத்துக்கு ஒரு டெஸ்ட்டு வையுங்கடா!

000

"மிகுந்த யோசனைக்குப் பிறகு டீசல் விலையைக் கூட்டும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. எனவே டீசல் விலையைக் குறைக்கவே கூடாது. அப்படி விலைக் குறைப்பு நடக்குமானால் மத்திய அரசின் நம்பகத் தன்மை முற்றிலும் போய்விடும். ஆகையால், எக்காரணம் கொண்டும் டீசல் விலையைக் குறைக்கவே கூடாது." - மான்டேக் சிங்.

ஆமா, அவரேதான்... அதே '28 ரூவா' மாண்டேக்தான். பேசுறது போதைல இல்லை; கொழுப்பு!!

000

2 லட்சம் கோடி ரூபாய்க்கு, அதி நவீன போர் விமானங்களை வாங்க, இந்திய விமானப் படை திட்டமிட்டுள்ளது. இது குறித்து, விமானப் படை துணைத் தளபதி, ஏர் மார்ஷல் ஆர்.கே.சர்மா கூறியதாவது: "ராணுவத்துக்கான ஆயுதத் தயாரிப்பில், தனியார் துறைக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தனியார் துறையை, பொதுத் துறை நிறுவனங்கள், போட்டியாளராக கருதக் கூடாது."

சிதம்பரத்தின் எக்கோ வாய்ஸ் மாதிரி இந்தாளு பேசுறாரு பாருங்க. அம்பானிக்கும் டாட்டாவுக்கும் கொட்டிக் கொடுக்கணும். அவ்வளவுதான். நாட்டின் பாதுகாப்பு அப்படீங்கறது எல்லாம் சும்மா கண் துடைப்பு. எதுக்கும் நாம காயப்போட்ட கிழிஞ்சுபோன ஜட்டிய பத்திரமா பாத்துக்குவோம். இந்த பட்டாளத்துக்காரனை நம்ப முடியாது!

000

முதல்வரின் தொலைநோக்குத்திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் - நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்.

ஆமா, நாங்க எவ்வளவு மகிய்ச்சியா இருக்கோம். அத்த வுடுங்க. அம்மா கடவாய் தங்கப்பல்லு தெரிய உங்களப் பாத்து கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறாங்க. கொஞ்சம் வாய மூடுங்க!


24.9.12

தாமரைக் கனியின் மோதிரக் காவியங்கள்...


தாமரைக் கனியின்
மோதிரக் கா(வி)யங்கள்,
தினந்தோறும் வீசும்
தண்ணி வாசம்,
வேட்டி சேலை உருவி
விபரீதக் காட்சிகள்,
பட்டாபட்டி மட்டும் போட்டு
மைக் செட்டு விளையாட்டு,
வெளி நடப்பு செய்தே
வெளியில் காலம் தள்ளும்
எலும்பில்லா எதிர்க் கட்சி,
இருமினாலும் தும்மினாலும்
பெஞ்சு முரசு கொட்டும்
வெக்கங்கெட்ட வெள்ளை வேட்டி,
கார் டயரைத் தொட்டு வணங்க
காத்திருக்கும் மந்திரிகள்...

அட,
அறுபதாண்டைத் தொட்டுவிட்ட
அருமைச் சட்டசபையே...
உன்னிடமிருந்து
இன்னும்...
இன்னும் நிறைய
எதிர்பார்க்கிறோம்!!

22.9.12

படித்தவுடன் கிழித்துவிடவும்

எச்சரிக்கை : இது கட்சித் தலைவர்கள் / வி.ஐ.பிக்களுக்கான ரகசியக் குறிப்பு. பொது மக்கள் படிப்பதைத் தவிர்க்கவும்.

அட்டென்ஷன் திரு. கருணாநிதி : 

மம்தா கூட்டணியிலிருந்து விலகியதால், மத்திய அரசு கையைப் பிசைந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், 
தாங்கள் தகிரியமாக ராஜாவையும் கனிமொழியையும் 2ஜி வழக்கிலிருந்து விடுவித்தே ஆகவேண்டும் என்று சோனியாஜியிடம் 'டிமாண்டு' செய்யுங்கள். அப்படி அவர்கள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லையென்றால், ராஜபக்சே இந்தியா வந்ததை சாக்காக வைத்து கூட்டணியிலிருந்து திமுகவும் விலகி விடுவதாக ஒரு போடு போடவும். இந்த சான்சை விட்டால் வேறு சரியான சந்தர்ப்பம் கிடைக்காது!

பெஸ்ட் ஆஃப் லக்.

கலைஞரின் நலத்தை மட்டுமே நாடும்...
- புதிய பாமரன்.





000





சிம்மக் குரலோன் மன்மோகன் சிங் அவர்களுக்கு :

வணக்கம். இப்பவும் தாங்கள் ரேடியாவில் நா தழுதழுக்க 'தெய்வத்திருமகள் விக்ரம்' வாய்சில
் பேசியதை கேட்க நேர்ந்தது. என்ன ஒரு அப்பாவித் தனம். இருந்தாலும் சற்றே ஏற்ற இரக்கங்களோடு பேசியிருக்கலாம். அதாவது, 'பணம் மரத்திலா காய்க்கிறது?' என்று ஒரு அருமையான கேள்வி கேட்டீர்களே... அந்த இடத்தில் கோபம் கொப்பளித்திருக்க வேண்டும். கடேசியா, 'சகோதர சகோதரிகளே...' அப்படீன்னு சொன்ன இடத்தில் குரல் ஒடிந்து மூக்கைச் சிந்தும் சப்தத்தை கொடுத்திருக்க வேண்டும். (எப்படி என்று தெரிந்துகொள்ள உங்கள் நண்பர் கருணா நிதியையோ அல்லது வைக்கோவையோ அணுகவும்). சும்மா ஜனங்கள் அப்படியே கண்ணீர் விட்டு கதறியிருப்பார்கள்.

இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. இன்னொரு முறை நான் சொன்னதுபோல பேசி அனைத்து சூரியன், மிர்ச்சி, ஆஹா எஃப் எம்முகளிலும் ஒலிபரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஜெய் ஹிந்த்.
-புதிய பாமரன்





000





எச்சரிக்கை : இது கட்சித் தலைவர்கள் / வி.ஐ.பிக்களுக்கான ரகசியக் குறிப்பு. பொது மக்கள் படிப்பதைத் தவிர்க்கவும்.

இந்தியர் நலன் இன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள சோனியாஜீ அவர்களுக்கு :

உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. இந்த பந்த்து, மம
்தாஓட குத்து, இதையெல்லாம் வச்சிப் பார்க்கும்போது பல்லி நெத்தியில வுழுந்துட்டாமாதிரி ஒரு பீலிங் வருது. ஆகையால் இதையெல்லாம் காரணம் காட்டி இங்கு வந்து சில்லரை விற்பனை செய்யப்போகும் வெளி நாட்டு சில்லரை கம்பேனிகளிடம், பேசினதுக்கு மேல போட்டு குடுக்குமாறு பேசிப் பார்க்கவும். நமக்கு ஆட்சியை விட பேங்கு பேலன்சு முக்கியமில்லையா ஜி!

கவனம் தேவை.

இப்படிக்கு
-புதிய பாமரன்

21.9.12

எனது முகநூலிலிருந்து... 14

## ராஜபக்சே மட்டும் இல்லைன்னா, சீமான், சிறுத்தை, வைக்கோ குரூப்புங்க கட்சி 'நடாத்துவதே' கஷ்டமா இருந்திருக்கும்னு நினைக்கிறேன். எப்படியும் தூங்கப் போறதுக்கு முன்னால, கோத்தபயலின் உதவிக்கு நன்றி சொல்லிட்டுத்தான் தூங்குவாங்க!

000

## மம்தாவுக்கு இருக்கும் சூடு சொரணைல, நூத்துக்கு பத்து பர்சண்ட்டு இந்தத் தாத்தாவுக்கு இருந்திருந்தாக்கூட, கேஸ் டீசல் வெலை குறைக்கலைன்னாலும் ரெண்டு மூணு மீனவமாருங்க உசுரையாவது காப்பாத்தியிருக்கலாம். ஆனா இந்தக் கெழடு, பரலோகம் போற வயசுலயும் திருட்டுப்பயலுவலுகளுக்கு கட்டுச் சோறு இல்லே தூக்கிட்டுப் போகுது?!

000

## நம்மகிட்ட சேப்புக்கொடியும், அந்தப் பக்கம் பச்சக்கொடியும் காட்டும் 'தோயர்' நல்ல்ல்ல்ல்ல கண்ணுவை விட, டைரக்ட்டா அடிச்சு பத்தவச்ச பரட்டை கலாமை எவ்வளவோ நம்பலாம்!!

000

## முதல்வரின் தொலைநோக்குத்திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் - நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்.

ஆமா, நாங்க எவ்வளவு மகிய்ச்சியா இருக்கோம். அத்த வுடுங்க. அம்மா கடவாய் தங்கப்பல்லு தெரிய உங்களப் பாத்து கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறாங்க. கொஞ்சம் வாய மூடுங்க!

000

## மக்களுக்கு கெடுதல் செய்வதில்தான் மத்திய, மாநில அரசுகளுக்கு போட்டி நிலவுகிறது: ராமதாஸ்.

யோவ் கூமுட்ட, 2004ல, ஆப்கானிஸ்தான்லயா அன்புமணி ஹெல்த் மினிஸ் டரா இருந்தாரு? இந்தியாவுலதான இருந்தாரு? அப்ப அவரு புடுங்கின மயிரையெல்லாம் எண்ணிக்காட்டு பாக்கலாம்! கெடுதல் செய்யுறதுல உனக்கு பங்கு கிடைக்கலைன்னு வயித்தெரிச்சல்...

000

## சந்து பொந்துலல்லாம் களி மண்ணுக்கு தேமேன்னு காவக்கெடக்கறாங்க நம்ம போலீஸ்காரவுங்க. பாக்கப் பரிதாபமாத்தான் இருக்கு!

000

## தூக்கில் தொங்கும் அண்ணா வளைவு: தாங்கி பிடிக்கும் செலவு ரூ.80 லட்சம்.

அப்படியே விட்டுடலாமா, இல்லே, ராக்கெட்டை கட்டி அலேக்கா மேல தூக்கிடலாமா அப்படீன்னு, எதுக்கும் நம்ம வில்லேஜ் விஞ்ஞானியை கூட்டியாந்து கன்சல்ட்டு பண்ணிடுங்க!

000

## ஒரு பண்ணைப்புரத்து சூத்திரன் வரும் வரைக்கும், கர்நாடக சங்கீத சிரோன்மணிகளால் மியூசிக் அகாடமி கேன்டீன் கீரை வடையை மட்டும்தான் காலி பண்ண வைக்க முடிந்தது!

000

## ஜட்டி போட்ட 'சீர்-கேர்ள்ஸ்' ஆப்கானிய கிரவுண்டுகளில் ரவுண்டு கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!! கிரிக்கெட் சாக்கடை ஆப்கானிலும் புகுந்துடுச்சி. இனி, ஆப்கானிய கலாச்சார விளையாட்டுக்கள் காணாமல் போகும். பெப்சியும் கோக்கும் கிரிக்கெட்டை ஆதிக்கம் செய்யும்.

000

## தன்னை எரித்துக்கொண்ட விஜயராஜ் எங்க கட்சிக்காரர்ன்னு சொல்லி, ஓட்டுப் பொறுக்கிகள் அவர் கையில ராவோட ராவா தங்களோட கட்சி சின்னத்தை பச்சை குத்திடாம இருந்தா சரி!!

000

## நேத்து, திருமாவளவு சிறுத்தைகள் ப்ரிக்ளின் ரோடுல, ரெட்டைமலை சீனிவாசனுக்கு ஏதோ சடங்கு செய்ஞ்ச கையோட, பெரம்பூர் ஜமாலியா வரைக்கும் இருந்த அத்தனை டாஸ்மக்குலயும் குமிஞ்சு கிடந்ததை பாக்க முடிஞ்சுது. பாவம், சிறுத்தைகளுக்குத்தான் எவ்வளவு தாகமான சோகம்?!

000

## பிராமணர்கள் அதிகம் வசிக்கும் நகர்களுக்கு மட்டும் 'ராஜாஜி தெரு, பாரதியார் தெரு' என்று தவறாமல் பெயர் வைக்கப்படுவது தற்செயலல்ல.!

000

## உருஹுதே, மருஹுதே, உலஹமே, வருஹுதே... இதே ஸ்டைலில், தமிழில் வேண்டுமென்றே வடமொழி 'ஸ்லாங்' கலப்படம் செய்கிறார்கள் தமிழ்ப் பாடக ராஸ்கல்கள். உதாரணம் : கலஹம் = கலகம்!!

000

## ராசாவின் சினிமாப் பாடல் இசையில் மட்டும் அவரின் நேர்த்தியைக் கண்டு வியக்கிறோம். ஒவ்வொரு சினிமாவிலும், காட்சிகளின் பின்னணியில், ராசாவால் தெளிக்கப்பட்ட இசைத் துளிகளில், இன்னொரு பீத்தோவனை நாம் காணக்கூடும். ஆனாலும் குப்பை சினிமாவைப் பார்த்தா
லொழிய, அத்தகைய இசைத் துணுக்குகள் நமக்கு கேட்கக் கிடைப்பதில்லை. சினிமாக் குப்பைகளுக்குள் ராசாவின் இசைப் பொக்கிஷங்கள் வேறு வழியின்றி, ஒளிந்து கிடக்கின்றன!

000

## 
நேத்து மழை பெய்யும்னாய்ங்க; பெய்யலை. 
இன்னைக்கு பெய்யும்னாய்ங்க; பெய்யலை. 
மேக மூட்டத்தைப் பாத்து நாளைக்கும் பெய்யும்பாங்க. 
ஒரு வானிலை அறிக்கைய சரியா விடுற அளவுக்கு நம்மகிட்ட டெக்னாலஜி இன்னும்கூட வளரலை. 
'வல்லர்ர்சு' கினா காணச்சொல்றாரு கலாம். 
நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டே!

000

## நல்லா யோசிச்சுப் பார்த்துட்டேன்...

கிஷ்ணாயில் கிடைக்கலை, மாசக் கடேசில காசு இல்லை, ரேஷன் கடை கியூவு, சம்பளம் பத்தலை, வெலை வாசி காய்ச்சி எடுக்கிறது, எல்லாத்துக்கும் அம்மா ஒரு வழி பண்ணிட்டாங்க.

சீரங்கம் போய்ட வேண்டியதுதான். ரங்க நாதன் கோயில்ல, நாள் பூராவும் உண்டக்கட்டி! பிரச்சினை எல்லாம் தீரணும்னா சீரங்கமே கதி!

நாள் பூரா உண்டக்கட்டி வழங்கும் அம்மா நாமம் வாழ்க!

000

## "அதாவது..., அம்பானிங்களும், பிர்லாவுங்களும், நோக்கியா, போர்டு கம்பேனிங்களும் கூடங்குளம் கரண்ட்டை எதிர்பார்த்து காத்துக்கிடறானுங்க. மொதலாளிங்களுக்கு கவுருமெண்ட்டுக்கு பயந்துதான ஆவணும்? இல்லாங்காட்டி ஜனங்க பண்ணுற இம்மாம்பெரிய போராட்டத்துக்கு 'எப்பிடின்னா போங்கடா கம்முனாட்டிகளா' அப்படீன்னு சொல்லிட்டு கவுருமெண்ட்டு கூடங்குளத்தை கைகழுவிட்டு போட்டே இருக்காது?!" - பேருந்துக் காத்திருப்பில் கேட்டது.

000

## இன்று, சரவணா ஸ் டோர்ஸ் கடைக்கு முன்னூற்றுக்கும் மேற்பட்ட சிங்களவர்கள் வந்திருந்தனர். ஆண்களும் பெண்களும் லுங்கியும் சட்டையும், வெறும் ரப்பர் செருப்பையும் அணிந்திருந்தனர். ஏழ்மை அவர்கள் உருவத்தில் தெரிந்தது. அவர்கள் யாவரும் உழைக்கும் மக்கள். அத்தனை பேரும் 60 வயதைக் கடந்தவர்களாய் இருக்கலாம். யாத்ரிகர்கள் போலும். 

நல்ல வேளை... எந்த வெறி நாயும் 'தமிழன்' வேடமிட்டு அங்கே வந்து அவர்களை குதறி எடுக்கவில்லை!!

000

## 1.'அன்னாடங்காய்ச்சி' மாதிரி, அன்றாடம் கூவி அறிக்கை விட்டே பொழப்பை ஓட்டுற டுபாக்கூர் கட்சிகள்.

2. பேச்சில் மட்டும் ரத்தத்தின் ரத்தமே, உடன் பிறப்பே, அஞ்சா சிங்கமே, அண்ணனே, தம்பியே என்று விளித்து பிழைப்பை ஓட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு பட்டை நாமம் போடும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள்.

3. ஒரு மயிருக்கும் உதவாத, தன்னைத் தானே விஞ்ஞானி, மெய்ஞ்ஞானி, டாக்டர் என்று பீற்றிக்கொள்ளும் மக்கள் விரோத தனிமனிதக் குரங்குகள்.

4. ஏசி பாரில் எந்த செய்தியை எப்படிப் போடலாம் என போதையில் விவாதித்து, விடியற்காலம் ஒன்றுபோலக் கூவும் காக்காய்க் கூட்டக் காகிதப் புலிகள்...

இன்றுதான், இவர்களைத் தெரிந்துகொண்டோம். மனிதப் போர்வையில் மிருகங்கள்!! க்ர்ர்ர்த் தூ...

000

## உயிரைக் காப்பாத்திக்க கடல்ல குதிச்சாங்களாம். 
நல்ல வேளை... 
கடல்ல குதிச்சவங்க எல்லாம் நீச்ச தெரிஞ்ச மீனவமாருங்க. இவுங்க மீனவரா மட்டும் இல்லாம இருந்திருந்தா, உயிர்ப்பலி இன்னைக்கு நூத்துக்கும் மேல இருந்திருக்கும்!

000

## தினமலர் vs கூடங்குளப் போராளிகள் :

1. வன்முறைக்கும்பல் போலீசாரை நோக்கி மணல் அள்ளி வீசினர். (போராடும் வயதான பெண்கள் சாபமிட்டு வாரி இறைக்கும் மண்).

2. இன்று நடந்த வன்முறையில் ‌போலீசார் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. (போராட்டக்காரர்கள் எத்தனை பேருக்கு காயம் பட்டது என்று சொல்ல மறுக்கிறது)

3. பல கிராமங்களுக்கு வன்முறை பரவுகிறது. (வாழ்வுரிமை கேட்டு போராடினால் வன்முறை).

4. வன்முறைக்கும்பல் போலீசார்
 மீது எதிர் தாக்குதல் நடத்தி படகு மூலம் தப்பி ஓடினர். (தடியடி தாக்குதல் நடத்தியது போலீசு; சிதறி ஓடிய பொதுமக்களை இவ்வாறு கூறுகிறது).

5. பத்திரிகையாளர்கள் காயம். (தன் சக பத்திரிகையாளர்களிடம் 'சென்டிமெண்டாக' சப்போர்ட்டு கேக்கிறது. நயவஞ்சகம்).

6. குழந்தைகள் கேடயமாக வைத்து ‌போராட்டம். (குழந்தைகள் போராடக்கூடாதா என்ன?).

7. படகு மூலம் உதயக்குமார் தப்பி ஓட்டம். (அதே செய்தியில் : தொலைக்காட்சிக்கு உதயக்குமார் அளித்த பேட்டியில், அராஜகத்தை கண்டு அஞ்ச மாட்டோம். இந்த அராஜக முசோலினி ஆட்சிக்கு முடிவு வரும் இவர்கள் போன இடத்திற்கே இந்த ஆட்சியாளர்கள் போய்சேருவார்கள். நான் இப்போது இடிந்தகரையில் தான் இருக்கின்றேன். இவ்வாறு உதயக்குமார் கூறினார்.).

8. வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் உதவி. (மத நல்லிணக்கத்துக்கு கேடு விளைவித்தல். எரியும் வீட்டின்மேல் பெட்ரோல் ஊற்றும் வேலை)

9. கூடங்குளம் அணு உலை பகுதியில்நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவர்களும், ஊழலுக்கு எதிராக இந்தியா அமைப்பினை சேர்ந்தவர்கள் , கண்டனம் தெரிவித்துள்ளனர். (உயர் வர்க்க மெழுகு வர்த்திப் போராளிகளுக்கு இருக்கும் மரியாதை, சாதாரண ஏழை கிராம மக்களுக்கு கிடைப்பதில்லை)

10. இடிந்தகரையில் போலீசார் வெளியேற வேண்டும் எனக்கூறி தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் 4.30 மணிக்கு கிளம்ப வேண்டிய மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில், 5.20 மணிக்கு கிளம்ப வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பவில்லை. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். (இப்போ, ரயில் டைமுக்கு கிளம்பணும். இதுதான் தினமலரோட பிரச்சினை!!)

000

## 
'ரிலையன்ஸ் அனிமேஷன்ஸ் வழங்கும் கோகுலத்தில் கிருஷ்ணன் - குழந்தைகளுக்கான 3டி படம்'. கருவாட்டை மடிச்சிக் கொடுத்த காகிதத்துல இந்த அடீஸ்மெண்ட்டு இருந்துச்சி.

ஒரு டவுட்டு... 

கோகுலத்தில் கிருஷ்ணன் அப்படீங்கற டைட்டிலை வச்சிப் பார்த்தா அது கொஞ்சம
் கூட தரம் குறையாத ட்ரிப்பிள் எக்ஸ் கதையாத்தான் இருக்கும். பெண்கள் அவிழ்த்துப்போட்டு குளத்தில் குளிக்கும்போது அதை மறைந்திருந்து நமது கிருஷ்ணன் ரசித்துப் பார்க்கும் பலான காட்களும் இடம் பெறும். இதை குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் என்று எப்படிக் கூறுவது?

இந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு 'ஏ' சர்டிபிகேட்டுதானே குடுத்திருக்கணும்?!

000

## 
சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகத்தைப் பார்க்க கலைஞர் வேலூர் பயணம்.

இதையே, சிவகாசிய ஒரு எட்டு எட்டிப் பார்த்துட்டு வரச்சொல்லுங்க பார்ப்போம். முதுகு வலின்னு பெரிசு ஆசுபத்திரில போயி படுத்துக்கும்! வெக்கக்கேடு!!
000
## 

20.9.12

மைக் டெஸ்டிங்... 1,2,3,


இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ராஜபக்சேவுக்கு மத்திய அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு. ராஜபக்சேக்கு இன்றிரவு மன்மோகன்சிங் விருந்து. தமிழக கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு.



மிஸ்டர் கருணாநிதி, இதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?

கருணாநிதி : பொறுத்திருந்துதான் பார்க்கணும். அடுத்து என்ன செய்யவேண்டுமென்று கட்சிக்குழு கூடி முடிவு செய்யும். (விருந்து கொடுக்கிற பொறுப்பை எங்கிட்ட கொடுத்திருந்த

ா, அதுல நாலுகாசு அமுக்கி இருக்கலாம்...).

மிஸ்டர் திருமா, நீங்க?

திருமாவளைவு : விருந்துக்கு அனைத்து தமிழகக் கட்சிகளையும் அழைத்திருக்க வேண்டும். மாபெரும் தவறு நடந்துவிட்டது. (நல்லவேளை கூப்பிடலை. நேரா போயிருந்தா கோத்தபய நம்மளை கொன்னுகூட போட்டிருப்பான். அனாதையா செத்துப்போயிருப்போம். எவன் கேக்கறது?)

மிஸ்டர் வைக்கோ, நீங்க?

வைக்கோ : ரோமச் சாம்ராஜ்ஜியத்தில் வீறு கொண்டு எழுந்த வரலாறு நமக்கு நெஞ்சுரம் ஊட்டுகிறது (ரொம்ப வார்த்தை விடக்கூடாது. பிற்காலத்துல காங்கிரசோட கூட்டணி கிடைச்சாலும் கிடைக்கும்).

டாக்டர் ராமதாஸ், நீங்க?

ராமதாஸ் : அந்த விருந்தில் மது பறிமாரப்படுவதை தடை செய்யவேண்டும். இல்லையென்றால் நாங்கள் நடுரோட்டுக்கு வந்து போராட நேரிடும்.

அம்மா, நீங்க?

ஜெயலலிதா : டீ பார்ட்டி என்றால் பிரச்சினை இல்லை. அதெல்லாம் சகஜம்தானே? நான் கூடத்தான் டெல்லியில் டீ பார்ட்டி வைத்திருக்கிறேன். ஆனால் நான் கூறவருவது என்னவென்றால், கச்சத் தீவை மீட்டு தமிழர்களிடம் ஒப்படைப்பேன் என்பதை இங்கே... (எழுதிக்கொடுத்த சீட்டு எங்கேய்யா காணோம்?)

சீமான் நீங்க?

சீமான் : (அம்மா பாக்கறாங்களான்னு சுத்தும் முத்தும் பார்த்துட்டு, டேபிளை ஓங்கி ஒரு குத்து குத்துகிறார். ஒரு கையை மடக்கி, மேல் நோக்கி உயர்த்தி காறி மைக்கின்மீது துப்புகிறார்). சிங்கங்களே, என் இன மக்களே... இந்தமுறை விட்டுவிடுவோம். அடுத்தமுறையும் இது தொடர்ந்தால்..., தொடர்ந்தால்..., நன்றி! வணக்கம்!!


7.9.12

தீபாவளி - கொலைகளும் கொண்டாட்டங்களும்...


முடிஞ்சிது. ஏழாம் நாள் இழவு இலை போட்டு, பதினாறாம் நாள் கருமாதி முடிஞ்சவுடனே, முதலாளி முருகேசன் ஜாமீனில் வெளிய வந்துடுவார். அதுக்காக, ராம் ஜெத்மலானி கூட சிவகாசி கோர்ட்டுக்கு வந்து வாதாட, சிவகாசி பட்டாசு ஆலை முதலாளிகள் சங்கம் ஆவன செய்யலாம். பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து, புதுப்பொலிவுடன் ஓம் சக்தி பட்டாசு ஆலை எப்பவும்போல இனிதே துவங்கிவிடும். இறந்துபோனவர்களின் மனைவியோ, கணவனோ, அக்காளோ, தம்பியோ,
 அம்மாவோ அல்லது அப்பனோ தாத்தனோ அதே வெடிமருந்து குடோனில் வெடிமருந்தை பிசைந்துகொண்டிருப்பார்கள்.

அடுத்த தீபாவளிக்கு முன்னர், மீண்டும் ஏதாவது ஒரு 'தனியார் பட்ட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து...' என்று பெரிய பெரிய கலர் படங்கள் போட்டு, தினங்களும் மலர்களும் ஒரு வாரத்துக்கு செய்தி போட்டு காசு பார்க்கும். இறந்துபோனவுங்களுக்கு தலா 2 லட்சம் அம்மா கொடுப்பாங்க.

ஆனா, எந்தக் காரணங்கொண்டும் பட்டாசு ஆலைகளை மூடிவிட முடியாது. பட்டாசுகளை ஒழிச்சிட முடியாது. பட்டாசு இல்லைன்னா தீவாளி இல்லை. தீவாளி இல்லைன்னா பத்தே நாள்ள பலகோடி யாவாரம் இல்லை. தீவாளி என்பது உற்சாகக் கொண்டாட்டம் அப்படீன்னு பன்னாட்டுக் கம்பேனிக்காரங்கூட கூவுறானுங்க. ஒரு நாட்டோட மகிழ்ச்சியே தீவாளி கொண்டாட்டம்தானே? இங்கே மகிழ்ச்சிதான் முக்கியம். துக்கம் எல்லாம் சும்மா ரெண்டு நாளைக்கு.

இதோ, தீவாளி எப்போன்னு சங்கராச்சாரி பஞ்சாங்கத்தை பொறட்டி டிவில சொல்லிடுவாரு. நாமெல்லாம் புத்தாடை உடுத்தி, புதுசு புதுசா தினுசு தினுசா பட்டாசு வெடிச்சி தீவாளி கொண்டாடுவோம்.

மீண்டும் இன்னொரு வெடி விபத்துல சந்திக்கலாம்
!!

1.9.12

எனது முகநூலிலிருந்து... 13

வட சென்னையில் சிறு வியாபாரிகளை மிரட்டி, கடை போர்டுகளில் முதலில் தமிழ் இருக்குமாறு செய்யும் அதிகாரிகள் (Givindasamy & Co Hardware Shop / கோவிந்தசாமி மற்றும் குழுமத்தினர் வன்பொருள் கடை)

இதையே நட்சத்திர விடுதிகளான அடையார் கேட் ஹோட்டலை (Adyar Gate Hotel) அடையாறு கதவு விடுதி என்றோ அல்லது லி மெரிடியன் (Le Meridian) ஹோட்டைலை தீர்க்க ரேகை விடுதி என்றோ மாற்றமுடியுமா? திராணி இருக்கிறதா?!

##

தேவாரம்-பண்ணைப்புரம் பேரூராட்சியில் கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா? அதிகாரிகள் சோதனை.

சார், இங்க மட்டும் பிளாஸ்டிக் கிளாசை அனுமதியுங்க. ஏன்னா, இதையும் எடுத்துட்டீங்கன்னா, டீக்கடையில மறுபடியும் கொட்டாங்கச்சியைக் கட்டிச் தொங்க விட்டுடுவாங்க!

##

இலங்கை அதிபர் ராஜபக்சே 21-ம் தேதி இந்தியா வருகிறார்.

ஈழமொன்றையே கனவில் சுமக்கும் எமது ஈழத்தாய், டெசோ கொரில்லாக்கள், விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் தன்மானச் சீமான்கள்... இவ்வளவு பேரையும் கிள்ளுக்கீரையாக நினைத்து, இந்தியாவில் காலடி வைக்கும் உன் வீரத்தை பாராட்டியே தீரவேண்டும். (ஆனா ஒண்ணு. தமிழ் நாட்டுப் பக்கமா வந்து இவங்க வீரத்தை சோதிச்சிடாதீங்க பாஸ். இதை வெச்சித்தான் இவங்க பொழப்பு நடக்கணும்!)

##

முகநூல் அப்பவே இருந்து தொலைச்சிருந்தா, காந்தியின் கோவணத்தை தொவைச்சி கிழிச்சிருப்பானுங்க. இன்னைக்கு தேதியில ரூவா நோட்டுல இம்மாம் பெரிய சிரிப்பு சிரிச்சிருக்கமாட்டாரு காந்தி! (மாசக் கடைசிண்ணே!)

##

புதுச்சேரி : ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர், "ஜெயேந்திரர் தற்போது சதுர்மாஷ்ய பூஜையில் (விரதம்) இருப்பதால், அவர் மடத்திலேயே தங்கி பூஜை செய்ய வேண்டியுள்ளது.

இதே வழக்கில், 2005ம் ஆண்டு செப்டம்பரில், சதுர்மாஷ்ய பூஜையில் கலந்து கொள்ள, கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பதற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவு அளித்துள்ளது' என்று கூறி வாதிட்டார். இதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை, அக்., 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

கோர்ட்டு, வாய்தா, வழக்கு... போங்கடாங்...

##

குஷ்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளாதது ஏன்?: 
மு.க.அழகிரி ஆதரவாளர்களுக்கு திமுக அனுப்பிய நோட்டீஸ்.

ஜாக்கெட்ல வெச்ச விண்டோ பெருசா இல்லையாம். அதான்! - பெயர் சொல்ல விரும்பாத அண்ணன் அழகிரி விசுவாசி.

##

2020ல், இந்தியா வல்லரசாகிவிடும் என்பது அப்துல்கலாமின் நம்பிக்கை. ஆனால், அதற்கான சாத்தியம் இல்லை. பல்கலைக்கழகங்கள் உட்பட அரசின் அனைத்து துறையிலும், லஞ்சம் நிறைந்து இருக்கிறது. இங்கு, படித்தவர்கள் செய்யும் குற்றங்கள்தான் அதிகம்.சுதந்திரம் பெற
்று, 66 ஆண்டுகள் ஆகியும் ஏழ்மையும், வறுமையும் குறைய வில்லை. ஒரு வேளை உணவுக்குக்கூட உத்திரவாதம் இல்லாத மக்களும், உள்ளனர். இன்றைக்கு, இந்தியாவில் 25 சதவீதம் பேர் குடிசைகளிலும், 15 சதவீதம் பேர் ரோட்டோரங்களிலும் வாழ்கின்றனர். இன்னும் தீண்டாமை ஒழியவில்லை - பாலகுருசாமி.

Copy to :
1. ஆல்-இன்-ஆல் அப்துல் கலாம்.
2. அப்துல் கலாம் கனவு காணும் குழந்தைகள்.
3. மெழுகுவர்த்தி போராட்டக் குழு.





##